இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

Loading

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திரபாபு  அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தமாக 24 மனுக்கள் பெறப்பட்டன.  மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு),  உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் (அரக்கோணம் உட்கோட்டம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் கோட்டீஸ்வரன் ( பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு) , காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *