டாடா மோட்டார்ஸ் Ace EVயின் டெலிவரிகளைத் தொடங்கியுள்ளது
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் அதிநவீன, பூஜ்ஜியம்-உமிழ்வுகொண்ட, நான்கு-சக்கர சிறிய வணிக வாகனமான புத்தம்-புதிய Ace EV இன் டெலிவரிகளைத் தொடங்குவதன் மூலம், நகரத்திற்குள் சரக்கு போக்குவரத்திற்கான நிலையான இயக்கத் தீர்வுகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் துவக்கியுள்ளது. புரட்சிகர Ace EVயின் முதல் வாகனங்கள் தொகுப்பு முன்னணி மின்-வர்த்தகங்கள், FMCG மற்றும் கூரியர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்பட்டது: அமேசான், டெல்லிவரி, DHL (எக்ஸ்பிரஸ் & சப்ளைசெயின்), பெஃடீஸ், ஃபிளிப்கார்ட், ஜான்சன் கன்சியூமர் ஹெல்த், MoEVing, சேஃப்எக்ஸ்பிரஸ் அண்ட் ட்ரெண்ட் லிமிடெட் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன. மேற்கொள்ளப்பட்டுள்ளன.Ace EV களின் முதல் ஃப்ளீட்டை கொடியசைத்து துவக்கிவைத்த, டாடா மோட்டார்ஸின் செயல் இயக்குனர் கிரிஷ் வாக், அவர்கள் “இந்திய சாலைகளில் Ace EV களின் அறிமுகம் பூஜ்ஜிய உமிழ்வு சரக்கு இயக்கத்தை நோக்கிய பயணத்தில் ஒரு பெரிய படியை குறிக்கிறது. எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட முழுமையான தீர்வு, பல்வேறு உள்-நகர விநியோகத் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்கிறது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு சிறந்த மதிப்பு முன்மொழிவை வழங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். Ace EV க்கு அவர்களின் ஊக்கமளிக்கும் வரவேற்ப்பு, நிலையான இயக்கம் மற்றும் நாட்டின் நிகர-பூஜ்ஜியம் நோக்கங்களை ஆதரிக்கும் எங்கள் முயற்சியை விரைவுபடுத்த எங்களை ஊக்குவிக்கிறது.” என்று கூறினார்.