புதுச்சேரி ஜெயின் சங்கத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

Loading

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜெயின் சமூக மக்களின் புனித ஸ்தலத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்ததை கண்டித்து புதுச்சேரி ஜெயின் சங்கத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து புதுச்சேரியில் ஜெயின் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். ஜார்கண்ட் மாநில அரசு,  அங்குள்ள ஜெயினர் புனித ஸ்தலத்தை சுற்றுலா ஸ்தலமாக அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் ஜெயின் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனையொட்டி, புதுச்சேரியில் உள்ள ஜெயின் சமூகத்தினர் ஜார்கண்ட் அரசை கண்டித்து வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவில் முன் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் சுற்றுலா ஸ்தலமாக மாற்றுவதை அரசு திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *