பி.எம்.பி கல்லூரி வளாகத்தில் வருகின்ற 21.1.2023 அன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் கிராமம் பி.எம்.பி கல்லூரி வளாகத்தில் வருகின்ற 21.1.2023 அன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் தருமபுரி சட்ட பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி.மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா.கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் சாமிநாதன்.தருமபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை உட்பட விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.