உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழா

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 5579 மாற்றுத்திறனாளிகளுக்கு 9 கோடியே 35 இலட்சத்து84ஆயிரத்து769மதிப்பிலானஅரசுநலத்திட்டஉதவிகள்வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளின் நலனைக் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறையை உருவாக்கி, அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500/- பராமரிப்புத் தொகை, மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதி, திருமண உதவித்தொகை. வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக, இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.”நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் பயிற்சியை தொடங்கி வைக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்களை சிறப்பாக சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் சாதாரண மனிதர்கள் கடல் நீரை தொட்டு மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டு மாற்றுத்திறனாளிகளுக்காக தனிகவனம் செலுத்தி கடலில் நீரை தொட்டுமகிழ்ச்சியாகஇருக்அவர்களுக்கென்றுதனியாகசாலைவசதிஏற்படுத்திகொடுத்திருக்கிறார்கள்.வேலூர்மாவட்டத்தில்மாற்றுத்திறனாளிநலத்துறையின்சார்பாசெயல்படுத்தபட்டவருமதிட்டங்கள்மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை திருமண உதவித்தொகை, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், உதவி உபகரணங்கள், வங்கி கடன் மானியம் சிறப்புப் பள்ளி சிறப்பாக ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம், 0 முதல் 6 வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையங்கள், செவிதிறன் குறைவு குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையம், பார்வைத்திறன் உடைய குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையம், மனவளர்ச்குன்றிகுழந்தைகளுக்ஆரம்ப கால பயிற்சி மையம், புற உலக சிந்தனை அற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம், ஆரம்பகால பயிற்சி மையம், உதவி உபகரணங்கள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான காப்பகம், பேட்டரி பொருத்தப்பட்ட இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, வங்கி கடன் மானியம் சிறப்பு பள்ளிகள் போன்ற அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறதவேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்த ஹோலி கிராஸ் செவிதிறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.வேலூர் மாவட்டத்தில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததாவதுஎனது பெயர் மணிமாறன். நான் வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் கத்தாலம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகுதண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரம நிலைக்கு ஆளாகினேன். என்னுடைய பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றாலும், கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றாலும் நான் ஆட்டோவில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.தற்போது மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தில் இருந்து எனக்கு உதவி தொகையாக மாதம் ரூபாய் 2000/- யும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் இணைப்பு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும் தரப்பட்டுள்ளது. மேலும் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைகளை பயன்படுத்தி என்னுடைய கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். நான் எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ளேன்.எனக்கு சமீப காலத்திற்கு முன்பு “நான் முதல்வன்” திட்டத்தில் மடிக்கணினி கொடுக்கப்பட்டது. இந்த மடிக்கணினி என்னுடைய கல்லூரி படிப்பிற்கு பயன்படுத்தி கொண்டேன். மேலும் நான் சொந்தமாக இ-சேவை மையம் வைக்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் வைக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தேன். தற்போது தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள மடிக்கணினி வைத்து என்னுடைய வீட்டின் அருகாமையில் இருக்கும் உறவினர்கள் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இ- சேவை மையத்தின் மூலம் என்ன என்ன வேலைகள் செய்ய முடியுமோ அந்த வேலைகள் அனைத்தையும் அவர்களுக்கு இந்த மடிக்கணினி மூலம் செய்து கொடுத்து வருகிறேன்.அது மட்டும் இல்லாமல் நான் சொந்தமாக பாரத வங்கியில் கடனுதவி பெறுவதற்காக விண்ணப்பம் கொடுத்துள்ளேன். நான் சுயமாக கறவை மாடு வளர்ப்பு பணி செய்து வருகிறேன். இதில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு என்னுடைய வயதான பெற்றோர்களின் மருத்துவ செலவையும், என்னுடைய செலவையும் பார்த்து கொள்கிறேன். எனக்கு பணிவிடை செய்து என்னை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு நான் ஆளாகி இருந்தாலும், நான் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு ஏதுவாகவும் உறுதியாகவும் என்னை தயார் செய்து கொள்ள உதவியாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.என்னுடைய பெயர் சதீஷ். நான் வேலூர் மாவட்டத்தில் வேலூர் வட்டம் பென்னத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு எந்த ஒரு வேலையும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடைய தாய், தந்தையர் இறந்து விட்டார்கள். எங்கு சென்றாலும் என்னுடைய உடலில் இருக்கும் குறையினை வைத்து எனக்கு வேலை இல்லை என்று கூறி விடுவார்கள். மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருந்து மாதம் ஊக்கத்தொகை ரூ.2,000/- மற்றும் இணைப்பு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் பேட்டரி இயங்கும் சக்கர நாற்காலி இவை அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகள் மற்ற மனிதர்களை போல் நாமும் செயல்பட முடியவில்லையே என்று வருத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தை போக்கி நாங்களும் உங்களைப் போன்று வேலை செய்பவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கி தற்போது நாங்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கும் மானியத்துடன் கடனுதவி கொடுத்து எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியதெரிவித்துக் கொள்கிறேன்.என்னுடைய பெயர் சுதாலட்சுமி. நான் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அகரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது தாய் தந்தை சமீபகாலம் முன்பாக காலமாகிவிட்டார்கள். எனக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு இருக்கிறது. என்னால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனக்கு பாதுகாப்பாக என்னுடைய தாய் தந்தை தான் இருந்து வந்தார்கள். அவர்கள் காலமான பிறகு என்னுடைய தேவைகளை செய்து கொள்ளவே எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கணவன் இல்லை என்றாலும், பெற்றோர்கள் இல்லை என்றாலும் நமது தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் நான் பெற்று என்னுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு வருகிறேன். எனக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.2000 யும், பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் கொடுத்து தமிழ்நாடு அரசு உதவி உள்ளது. எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளையும், அன்பு தமிழர்களையும் வாழவைத்த மாண்புமிகு தமிழ்நாடு கொள்கிறேன் முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்

0Shares

Leave a Reply