100 ஆண்டுகளாக கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக சொர்க்கவாசல் திறப்பன்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர்.