நியாய விலைக்கடைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்ஆய்வு மேற்கொண்டார்

Loading

தேனி மாவட்டம்நியாய விலைக்கடைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தின்செயல்பாடுகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
தேனி மாவட்டம், பூதிப்புரம், வீரபாண்டி, கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் போ.மீனாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று (28.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்       க.வீ.முரளீதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, பூதிப்புரம், வீரபாண்டி, கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் விற்பனை முனை இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடை வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, போ.மீனாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, மருத்துவ உபகரணங்கள், அதன் செயல்பாடுகள், உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைக்கு வருகை தந்த பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சாந்தி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *