பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு

Loading

திருவள்ளூர் டிச 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக அனைத்து குடியிருப்புகளிலும் 19.12.2022 முதல் 11.01.2023 வரை பள்ளிச் செல்லா,இடைநின்ற குழந்தைகள் (6-18 வயது) மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை (0-19 வயது) கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான செ.ஆ.ரிஷப் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இக்கணக்கெடுப்பில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றம் இணை துறை பணியாளர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.   இக்கணக்கெடுப்பில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்தவிவரங்கள்சேகரிக்கப்பட வேண்டும். மேலும், 5ம் வகுப்பு முடித்தவர்கள் 6ம் வகுப்பிலும், 8 ம் வகுப்பு முடித்தவர்கள் 9ம் வகுப்பில் சேர்ந்துள்ளனரா எனவும் கண்டறியப்பட வேண்டும். கணக்கெடுப்பின் போது சேகரித்த தகவல்களை உடனுக்குடன் அலைபேசி செயலி (Survey app) மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பாக புலம் பெயர்ந்த குழந்தைகள், பெண் குழந்தைகள் மற்றும் 3ம் பாலினத்தவர் எவரேனும் பள்ளி செல்லாமல் உள்ளனரா என சிறப்பு கவனம் செலுத்தி கண்டறியப்பட வேண்டும். வட்டார அளவில் இணை துறை அரசு பணியாளர்கள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இக்கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், கல்வி மற்றும் பிறதுறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *