திமுக அரசை கண்டித்து அ. தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

அண்ணா கிராமம் ஒன்றியத்தில்  திமுக அரசை கண்டித்து  அ. தி.மு.க.  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி டிச – 15. கடலூர் வடக்கு மாவட்டம் ஒருங்கிணைந்த அண்ணா கிராமம் ஒன்றியம் பண்ருட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் மின்கட்டணம், பால் விலை உயர்வு, மற்றும் அத்தியாவாசி பொருள்கள் விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகபுஷணம், ஒன்றிய கழக செயலாளர் அண்ணா கிராமம் வடக்கு தலைமையில் நடைபெற்றது. எம். சி.சம்பத், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தொழில்துறை அமைச்சர் கண்டன உரை  ஆற்றினார். கந்தன், தமிழ்ச்செல்வன், சிவா, ஒன்றிய  செயலாளர்கள் வரவேற்புரை ஆற்றினர். ஜானகிராமன், ஒன்றிய பெருந்தலைவர் கௌரி பாண்டியன்,   ராமசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தாடி. முருகன், பண்ருட்டி நகர செயலாளர் கனகராஜ், பேரூர் கழக செயலாளர் தொரப்பாடி. சுந்தரி முருகன்,  மாவட்ட கவுன்சிலர் முன்னிலை வகித்தனர். தாமோதரன், முன்னாள் அமைச்சர் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சீனிவாச ராஜா, கழக மருத்துவர் அணி தலைவர் தங்க மணி, கழக மீனவர் அணி பிரிவு இணை செயலாளர் ஆறுமுகம், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் கார்த்திகேயன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் நத்தம். கோபு, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரஜினி, உமா துரைராஜ், உமா மதியழகன், ஏழுமலை, விசுவநாதன், கிருபாகரன், பழனியம்மாள் குமார், அம்சவேணி பழனி, நளினி பிரகாஷ், புரட்சி குமார், மணிகண்டன் அண்ணா கிராமம் வடக்கு ஒன்றியம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் கூட்டுறவு சங்கத் தலைவர் நன்றி உரை கூறினார். மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, வார்டு, பகுதி, கிளைக் கழக நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பணி  நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *