பாஜக இளைஞர் அணி தலைவர் மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கைது :
திருவள்ளூர் டிச 14 : திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் கடந்த 3-ந் தேதி திருவள்ளூர் நகர பாஜக இளைஞரணி தலைவர் உதய.கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர் கார்த்திகேயனுடன் மதுபான பாரில் 160 ரூபாய் மதிப்பிலான சிக்கன் ஈரல் சைடிஸ் வாங்கி மது அருந்திவிட்டு பின்னர் பணத்தை தராமல் சென்றுள்ளனர்.அதைத்தொடர்ந்து 5-ந்தேதி மீண்டும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டிருந்த பாஜக நகர தலைவர் உதய கார்த்திகேயனை பார்த்து மதுபான பார் ஊழியர் பிரசாத் வயது (31 )அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.தன்னிடமே பணம் கேட்கிறாயா … நான் பாஜக நிர்வாகி என்று கூறி அவரிடம் தகாத வார்த்தையில் திட்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்வரை சரமாரியாக கன்னத்தில் அறைந்து அங்கிருந்து வாகனத்தில் கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளார் .இது குறித்து உதய.கார்த்திகேயன் மற்றும் பரந்தாமன் ஆகியோர் மீது பார் ஊழியர் பிரசாத் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் டாஸ்மாக் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் உதய.கார்த்திகேயன் திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. ஆனால் வீட்டில் விசாரித்த போது உதய.கார்த்திகேயன் தலைமறைவானது தெரியவந்தது.இதனையடுத்து திருவள்ளூர் தாலுக்கா எஸ் ஐ சுரேஷ் எஸ். எஸ்.ஐ சீனிவாசன் மற்றும் சங்கர், நாகேந்திரன் ஆகிய போலீசாருடன் தேடி வந்த நிலையில் ஈரோட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.இதனை அடுத்து ஈரோட்டில் பதுங்கி இருந்த உதய கார்த்திகேயனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.முன்னதாக கடந்த 6-ம் தேதியே உதய கார்த்திகேயனின் நண்பன் பரந்தாமனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.