மின்கம்பியை மிதித்த 6 பசுமாடுகள் உயிரிழப்பு :
திருவள்ளூர் டிச 11 : திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வேப்பம்பட்டு அடுத்த கோவில் குப்பம் பகுதியில் மின்கம்பங்களுக்கு இடையே சென்ற குறைந்தழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில்குப்பம் பகுதியில் வசித்து வரும் சம்பத் என்பவரது நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா, தேவன், வடிவேலு, , சுப்பிரமணியன் ஆகியோரது ஆறு பசுமாடுகள் மேய்ச்சலுக்கு ஓட்டி வந்துள்ளனர். மேய்ச்சலில் இருந்த போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 பசுமாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக பலியாயின. இது குறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்த மின் இணைப்பை துண்டித்து பசுமாடுகளை அப்புறப்படுத்தினர்.ஏற்கனவே இந்த பகுதியில் இருக்கக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை மாற்றி அமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று 6 பசுமாடுகள் இறந்து போனது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டதாக கூறி கிராமவாசிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனைடுத்து கிராம மக்களை சமாதானம் செய்த செவ்வாப்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.