அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Loading

எண்ணேக்கோல்புதூர் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் விரைவில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்- பாலக்கோட்டில் அன்புமணி ராமதாஸ் பேச்சுதருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாமக கட்சி நிர்வாகி கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தூக்கி வைத்தார்.இதையடுத்து மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 50 ஆண்டுகால விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் எண்ணேக்கோல் புதூர் கால்வாய் நீர்பாசன திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் விரைவில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், அரசியல் கட்சிகள் இந்து, முஸ்லிம், கிருத்துவர், தமிழர், திராவிடன் என தற்போது மத பிரிவினை அரசியல் செய்து வருவதாகவும்,ஆட்சி அதிகாரம் என்னிடம் இருந்தால் தமிழ்நாட்டில் 6 மாதத்தில் 40 சதவீதம் பிரச்சனைகள் முழுமையாக தீர்ப்பேன் என்று எழுச்சி பூர்வமாக பேசினார். இதில் திரளான பொதுமக்கள் பாமக கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *