விலகினார் அனுபமா… இணைந்தார் மடோனா
விலகினார் அனுபமா… இணைந்தார் மடோனா
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கில் ‘டிஜே தில்லு’ என்ற படத்தின் 2ம் பாகத்தில் சித்து ஜோன்னலகட்டாவுடன் நடித்து வந்தார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. சில நாட்களாக படப்பிடிப்புக்கு அனுபமா தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சித்து – அனுபமா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அந்தப் படத்தில் இருந்து அனுபமா விலகினார். அவருக்குப் பதிலாக மடோனா செபாஸ்டியனை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தைத் தயாரிக்கும் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மேலும் ஒரு படத்துக்கு மடோனாவை ஒப்பந்தம் செய்துள்ளது.