பெப்ஸ் கம்பெனி மெத்தைகளை ஏற்றி வந்த டெம்போ திடீரென தீ பற்றி எரிந்தது

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திப்பம்பட்டி  ஏரிக்கரை அருகே  அரூர்- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி பெப்ஸ் கம்பெனியின் சுமார் 5லட்சம் மதிப்பிலான மெத்தைகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ லாரியில் திடீர் என கருகிய வாசம் வந்ததால் டெம்போ லாரியின் ஓட்டுனர் குமாரசாமி இறங்கி வந்து பார்த்தபோது தீ பற்றியதை  அடுத்து தீயை அணைக்க முற்பட்டார் அப்போது தீ மள மள என பற்றி எரிய தொடங்கியது  ஓட்டுநர் உயிர் தப்பினார் தகவல் அறிந்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முற்படுவதற்கு முன்பு டெம்போ வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு படையினர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *