திண்டுக்கல்லில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் துவக்க விழா நடைபெற்றது

Loading

திண்டுக்கல்லில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் போடி ரவி பிள்ளை வரவேற்புரை ஆற்றினார் .சிறப்பு விருந்தினராக திருக்கைலாய பரம்பரைவேள குறிச்சிஆதீனம், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர்  தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர்  ஐசரி கணேஷ், சமீர் குப்தே, ரவீந்திர கிஷோர்சிங்ஹா, ராஜ் டிவி குழுமத் தலைவர் ரவீந்திரன் ,டாக்டர் ஜெகதீசன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.துவக்க விழாவில் மாநில சங்க நிர்வாகிகள் சங்கர், பழனிரவி,முருகேசன்,பாலமுருகன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் மற்றும் கேரளாவிலிருந்தும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிர்வாகிகளுக்குநினைவு பரிசு வழங்கப்பட்டது. மாநில மகளிர் அணி தலைவி பேராசிரியர் வேலம்மாள் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply