கோவை அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் ஆலோசனைக் கூட்டம்

Loading

கோவை அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் ஆலோசனைக் கூட்டம் கோவை புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடந்தது. டிசம்பர் 22ல் நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் குதூகல கொண்டாட்ட விழாவை குறித்தும் அனைத்து சமய தலைவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது எனவும் 200 ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி. சௌந்தரபாண்டியன் மாநிலத் துணைத் தலைவர் பாஸ்டர். டாக்டர்.M.W.ராஜன், மாநில மகளிர் அணி தலைவி கரோலின் விமலாராணி, கோவை மாநகர் மாவட்ட போதகரணி செயலாளர் பாஸ்டர் M. இயேசு ராஜன், கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜி.ஜோஸ்பின் மெர்சி, கௌரவத் தலைவர் P.S ஸ்டீபன், கௌரவ ஆலோசகர் ஞான ஆனந்த் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *