ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்

Loading

கியூ.பி. எம். எஸ்” .

அரசு மருத்துவமனை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.!
ஈரோடு நவம்பர் 24
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல போராட்டங்களை நடத்தி மீண்டும் எந்த தீர்வும் எட்டப்படாததால் நேற்று கியூ பி எம் எஸ் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் துப்புரவு பணியாளர்கள் சுமார் 130 க்கும் மேற்பட்ட நபர்கள் பணியில் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர் ஆனால் அந்த போராட்டத்தில் பல தொழிலாளர் நல சங்கங்கள், க்யூ பி எம் எஸ் தொழிலாளர்களுடன் ஆதரவு அளித்து சேர்ந்து போராட்டங்களை அறிவித்து நடத்தியது பிறகு லேபர் ஆபிஸில் கடந்த 13ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய தன் பேரில்  மீண்டும் பணிக்கு சென்றனர் ஆனால் மழையின் காரணமாக கடந்த 13ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ஆதலால் நேற்று 23ஆம் தேதி கியூ பி எம் எஸ் நிர்வாகத்தை சேர்ந்த மேனேஜர் மற்றும் ஜோனல் மேனேஜர் ஆகியோரை வைத்து பேச்சு வர்த்தை நடத்துவதாக கூறப்பட்டது ஆனால் லேபர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்பதால் மீண்டும் அரசு மருத்துவமனை  ஜே.டி., வரும் வரை நாங்கள் பணிக்கு திரும்ப மாட்டோம் என மருத்துவமனை வளாகத்தின் முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் . ஈரோடு அரசு மருத்துவமனை முகப்பில் வேலைக்கு செல்லாமல் துப்புரவு பணியாளர்கள்” கியூ பி எம் எஸ்”    நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால். அரசு மருத்துவமனையில் இதனால் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *