சென்னையில் குருக்குலம் மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா
சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள குருக்குலம் மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் கையில் நேரு புகைப்படங்கள்,ரோஜா பூக்களை கொடுத்து ஹேப்பி பெர்த்டே நேரு என மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்து கேக் வெட்டி,இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதனையடுத்து பள்ளி குழந்தைகளுக்கு பென்சில்,ரப்பர்,ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அனைவருக்கும் பரிசாக வழங்கபட்டது.நிகழ்ச்சியின் முன்னதாக ராஜீவ் நட்பகம் சார்பில் சர் தியாகராயா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காங்கிரசார் நேருவின் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைதலைவர் முகமது பாரூக் தலைமையில் நடைபெற்ற நேருவின் பிறந்தநாள் விழாவில் ராஜீவ் நட்பகம் நிருவனர் க.இராமலிங்க ஜோதி ஒருங்கிணைந்து,3வது சர்க்கிள் காங்கிரஸ் தலைவர் டீ.கே.மூர்த்தி,சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான்,வர்த்தகபிரிவு மாவட்ட தலைவர் வே.உமாபதி.மனித உரிமைதுறை மாநில செயலாளர் பி.வேலா,மாமன்ற முன்னால் உறுப்பினர் எம்.கே.பாபு சுந்தரம்,மாநில பொதுகுழு உறுப்பினர்கள் ஜி.பொன்னுரங்கம்,மதாரமா கனி,மகளிரணி தலைவி மாத்தூர் ரங்க நாயகி,மாவட்ட மனித உரிமைத்துறை முன்னால் தலைவர் ஆர்.எஸ்.கலைமணி மாவட்டநிர்வாகிகள் ஆர்.நேரு,தலைவர் ஆர்.கே சிவராஜ்,கே.ராஜேந்திரன்,எஸ்.ஆர் .ராஜேந்திரன்,எஸ்.அன்பழகன்,வட்ட தலைவர்கள் வி.கே.செல்வராஜ்,ஆர்.விநாயகமூர் த்தி,ஜெ.ஜெயபிரகாஷ்,துராபுதீன், என்.பி.சுந்தரம்,ஆர்.சுரேஷ்குமா ர்,பி.முனியன்,டி.ஆனந்தராஜ்,கே. காளிதாஸ்,மாநில பேச்சாளர்கள் அதிரடி ஆசைதம்ப,ஆர்.எஸ் பார்த்த சாரதி,ஏ.காஜா மொகிதீன்,மங்கையர்கரசி,மற்றும் சமூக ஆர்வலர் பென்னி காமராஜ், பள்ளியின் தாளாலர் புன்னை பிரபு மற்றும் ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.நிகழ்ச்சி நிறைவின் இறுதியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான 3தீர்மானங்களை வாசித்தனர்