அய்யா வைகுண்டரிடம் மன்னிப்பு கேட்ட தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான  உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம்  கன்னியாகுமரி வந்தார், பின்னர் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதிக்கு அழைத்து வரப்பட்டார், அங்கு  ஆண்கள் யாராக இருந்தாலும் அய்யா வைகுண்டரின் தலைமை பதியினுள் நுழையும்போது தலைபாகை அணிந்து தான் செல்ல வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் உதயநிதி ஸ்டாலின்,  நாகர்கோவில் மேயர் ஆகியோர்  தலையில் தலைப்பாகை இல்லாமல் தலைமை பதிக்குள் வந்து அய்யாவை வணங்கி சென்றுள்ளார். இது அய்யா வழி பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் திமுக வழக்கறிஞரணி பிரிவில் உள்ளவரும் அய்யா வைகுண்டரின் தலைமை பதியின் குருக்களின் ஒருவரான பால ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் நேற்று  பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறுப்பிட்டுள்ளதவாது:-  அய்யா துணை இதய அன்பர்களே,
வணக்கம்   வாழ்த்துக்கள்..
அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.  நான் அழைக்கவில்லை. வருவதாக நாகர்கோவில் மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்.  நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்றநிலையில் நடந்துவிட்டது.  அய்யா வழியினரைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
அய்யா உண்டு. இச்சம்பவம் அய்யாவழி மக்களிடையே  கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது..

0Shares

Leave a Reply