கழிவுநீர் கால்வாய் அடிக்கல் நாட்டினர்
ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 10 இலட்சம் ரூபாய் மதீப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 10 இலட்சம் ரூபாய் மதீப்பிட்டிலான திட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு காரிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், து.தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜக்கசமுத்திரம் ஊராட்சி பந்தாரஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் முதல் செல்வி வீடு வரை 7 இலட்சம் ரூபாய் மதீப்பிட்டிலும், பிக்கல…