மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.59 கோடி பேர் பயனடைந்துள்ளனர்

Loading

சமுதாயத்தில் நிலவும் பாரம்பரியமான தடைகளைக் கடந்து தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு பெண்கள் பல துறைகளிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் செயல்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுஇ மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என அனைத்து நிலைகளிலும் மகளிர் முன்னேற்றத்திற்குத் துணை நிற்கும் வகையில் பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தவகையில் “மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை” என்பதை இலக்காக கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்று சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் மகளிர் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற்றப் பாதையைச் செப்பனிடும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உயர்கல்வி பயிலும் மகளிர் குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்லும் மகளிர் சுய தொழில் புரியும் மகளிர் என பெரும்பான்மை மகளிர் பொது போக்குவரத்தையே சார்ந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் நகரபேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.
தமிழ்நாடு மாநில அளவில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நகரப்பேருந்துகளின் வாயிலாக ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.3000 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்படுகிறது. பணிபுரியும் மகளிர் உயர்கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல்  நகரப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என கணக்கிடப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் திருநங்கைகள், மாற்றுதிறனாளிகள் மற்றும் உடன் வரும் உதவியாளர் ஒருவர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ள சுமார் ரூ.1200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு இழப்புத் தொகையினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2இ166 அரசு பேருந்துகளில் சராசரியாக 15.84 இலட்சம் பயனாளிகள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். மகளிர் கட்டணமில்லா 890 பேருந்துகளில் சராசரியாக 5.38 இலட்சம் பேர் தினசரி பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி தமிழக அரசின் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட அரசு பேருந்தில் இதுவரை 1.59 கோடி பேர் பயனம் செய்துள்ளார்கள். இதனால் பெண்களின் பொருளாதார நிலை உயர்ந்து வருவதோடு கிராமப்புற பெண்கள் நகர்புறங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வாழ்வாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். பெண்கள் யாரையும் சார்ந்திராமல் சுயசார்பு அடைந்து வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை நகமலை புதுக்கோட்டையை சேர்ந்த திருமதி.பாப்பாத்தி  அவர்கள் தெரிவிக்கையில்:-
நான் விவசாயத் தொழில் செய்து வருகிறேன். நான் தினமும் பூ பறித்து அவற்றை விற்பனை செய்வதற்காக நாகமலை புதுக்கோட்டையிலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவேன். மாதந்தோறும் பேருந்து பயண கட்டணம் குறைந்தது ரூபாய் 1000-க்கு மேல் செலவாகும். தற்போது மகளிருக்காண இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தினமும் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறேன். இதுவரை பேருந்து கட்டணமாக நான் செலவு செய்த பணம் தற்போது எனக்கு சேமிப்பாக உதவுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை  சேர்ந்த திருமதி.நஜிமா கார்த்திக் அவர்கள் தெரிவிக்கையில்:-
நான் மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். அரசு பேருந்தில் தினசரி பயணித்து வேலைக்கு சென்று வருகிறேன். மாதத்திற்கு ரூபாய் 2000 முதல் 2500 வரை   பேருந்து கட்டணமாக செலவாகும். எனது மாதச் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை பேருந்து கட்டணமாக செலவழித்து வந்தேன். தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின்கீழ் நானும் பயனடைந்து வருகிறேன். இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தினை எனது குடும்ப செலவிற்கும்இ எனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும் மருத்துவச் செலவிற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன். பெண்களை முன்னேற்றக் கூடிய வகையில் இச்சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம் சொக்கலிங்கம் நகரை சேர்ந்த திருமதி.அம்சக்கொடி அவர்கள் தெரிவிக்கையில்:- எனது பெயர் அம்சக்கொடி. நான் குடும்பத்தலைவியாக உள்ளேன் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது மருத்துவமனை சென்று வருவதற்கும் சாமி தரிசனம் செய்தவதற்கு கோவிலுக்கு சென்று வருவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய இலவச பேருந்து பயண திட்டம் பயனுள்ளதாக உள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் மாதத்திற்கு குறைந்தது ரூபாய் 2 ஆயிரம் எனது சேமிப்பாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சேமிக்கும் பணத்திலிந்து எனது பொருளாதார சிக்கலை பூர்த்தி செய்வதற்கு உதவிகரமாக உள்ளது. எனவே என்னைப்போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் கஷ்டத்தை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *