.100 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் ஹிருத்திக் ரோஷன்

Loading

புதிய காதலியுடன் ரூ.100 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் ஹிருத்திக் ரோஷன்
தனது காதலி ஷபா ஆசாத்துடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.100 கோடி வீட்டில் குடியேற உள்ளார். மும்பை பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் ஹிருத்திக் ரோஷன், இந்திய அளவில் அழகான நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். ‘கிரிஷ்’, ‘தூம்’, ‘ஓம் சாந்தி ஓம்’, ‘கைட்ஸ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி சுஷானேயை 2014ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் முறைப்படி பிரிந்துவிட்டனர். இந்தத் தம்பதியருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களை இரண்டு பேரும் சேர்ந்தே கவனித்துக்கொள்கின்றனர்.
ஹிருத்திக் ரோஷன் சமீப காலமாக ஷபா ஆசாத் என்ற நடிகையைக் காதலித்து வருகிறார். ஷபா ஆசாத் பாடகியாகவும் இருக்கிறார். இருவரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்குச் சேர்ந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். கோவாவில் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுஷானே புதிய ஹோட்டல் திறந்த போது அதில் கூட ஹிருத்திக் ரோஷன் தனது புதுக்காதலியோடு சேர்ந்தே கலந்து கொண்டார். அதோடு ஹிருத்திக் ரோஷன் குடும்ப நிகழ்ச்சிகள், விருந்துகளிலும் ஷபா ஆசாத் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், ஹிருதிக் ரோஷன் தனது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளார். சிறிது காலம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ இருவரும் முடிவு செய்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன் ஏற்கெனவே மும்பை வெர்சோவா கடற்கரையையொட்டி ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் மூன்று மாடிகளை மொத்தமாக ரூ.97.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார். தற்போது இந்த வீட்டிற்குத் தனது காதலியுடன் ஹிருத்திக் ரோஷன் குடியேற முடிவு செய்திருக்கிறார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *