முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 105 வது பிறந்த தினம்.! 

Loading

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினத்தை ஈரோடு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு கட்சி அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர்  ஆர் எம் பழனிச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், முத்துக்குமார், வட்டாரத் தலைவர்கள் கொடுமுடி மேற்கு முருகேஷ், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர் தில்லை சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்டச் செயலாளர் பூவை ராஜன், இளைஞர் காங்கிரஸ்  மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வேலுச்சாமி, ரோசாப்பூ என்கின்ற பெரியசாமி, வட்டாரத் துணைத் தலைவர் ஹலாதத், சுகுமார், பழனிச்சாமி உள்ளிட்ட பேரியக்க நண்பர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *