மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், நவ.5 சேலத்தில், அரசாணை152-ஐ மறு சீராய்வு செய்யக்கோரி மாநகராட்சி பணியாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணை செய்யக்கோரி மாநகராட்சி சேலம் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கதின் சார்பில் ஆர்ப்பா டம் நடந்தது. நகராட்சி மாநகராட்சி அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில தலைவர் ஐம்பு தலைமை வகித்தார்,நிர்வாகிகள் மணி கண்டன் நாகராஜன், சுப்ரமணியன், வீரகுமார், சரவணன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அர சாணை 152-ன்படி பணி யாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைக்கப்பட் டுள்ளதுடன். தனி யார் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்படவுள் ளனர். இதனால் வாரிசு களுக்கு கருணை பணிநியமனம் இல்லாமல் போகும். மேலும், 35ம் பணியிடங்கள், 3417 ஆக சுருக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்கள் முதல் தூய்மை பணியாளர் கள் வரை பல பணியிடங் கள் இருக்காது வேலைவாய்ப்பு பறிபோ கும். எனவே அரசாணை 152-ஐ மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.