துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா
ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா ஈரோடு அக்டோபர் 31 ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசு புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு இத்தகைய பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி நகராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தற்போது மாநகராட்சியில் 1500 தொழிலாளர்கள் தின கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர் அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் எனவே தனியார் மயமாக்கும் அரசு ஆணையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி மேயர் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை மேயர் துணை மேயர் மற்றும் ஆணையரிடம் கூறினர் தனியார் துறை அனுமதிக்கப்பட்டார் இவளது வாழ்வாதாரம் பாதிக்கும் சம்பளம் குறையும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர் முன்பிருந்தது போலவே மாநகராட்சிக்கு கீழ் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் தங்களது பணியை தொடர வேண்டும் தங்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் அரசு வெளியிட்டுள்ள இப்பணிகளை தனியார் மையமாக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்
[10/31, 1:54 PM] c.baranidharan@gmail.com: தற்காலிக பணியாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் :மேயர் ஈரோடு அக்.31: பொறியியல், சுகாதாரம் மற்றும் துப்புரவு பிரிவுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் நலன் காக்கும் கவுன்சிலர்களின் நிலைப்பாட்டை ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆதரித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அவுட்சோர்சிங் ஏஜென்சிகளை பணியில் அமர்த்த வேண்டும் என்ற புதிய உத்தரவை பல கவுன்சிலர்கள் எதிர்த்தனர்.
இந்த GO அமல்படுத்தப்பட்டால் இப்போது சுய உதவிக்குழுக்களின் கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். “மாநிலம் முழுவதும் உள்ள 20 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை உள்ளடக்கிய அரசாணையை எதிர்க்க முடியாது” என்று மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் தெரிவித்தார்.
அப்போது, இப்பிரச்னையில் கவுன்சிலர்களின் கருத்துகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொழிலாளர்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றார் மேயர். கவுன்சிலர்கள் அவரது நிலையை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.