சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது.

Loading

தூத்துக்குடி மாவட்டம்:
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24) மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30) ஆகியோர் கடந்த 24.10.2022 அன்று மீளவிட்டான் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த அதேபகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெகதீஷ் (21) மற்றும் முத்துப்பாண்டி மகன் பாலசிங் (40) ஆகிய இருவரும் சேர்ந்து சரவணன் மற்றும் கபிஸ் ஆகியோரிடம் மது போதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஹென்சன் பால்ராஜ் வழக்குபதிவு செய்து எதிரிகள் ஜெகதீஷ் மற்றும் பாலசிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ஜெகதீஷ் மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், எதிரி பாலசிங் என்பவர் மீது தூத்துக்குடி மத்தியபாகம், சிப்காட் மற்றும் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் மற்றும் மதுவிற்பனை உட்பட 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *