அம்பத்தூர் மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வரும் 30 ம் தேதி வரை நேரடி சேர்க்கை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

Loading

திருவள்ளூர் அக் 26 :
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சென்னை – 600 098-ல் வரும் 30.10.2022 வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.8ஆம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், சைக்கிள்,  பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும்.
அதன்படி கம்மியர் கருவிகள் 2 வருடம்,கோபா 1 வருடம்,செயலகப் பயிற்சி 1 வருடம்,கட்டிடப்பட வரைவாளர் 2 வருடம் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,தையல் தொழில் நுட்பம் 1 வருடம் பயிற்சி பெற 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ்,  ஆதார் அட்டை, பாஸ்போர்ட்; அளவு புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *