தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி

Loading

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜே. பி.ஜோதி என்பவர் தலைமறைவானதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தை முற்றுகை :

திருவள்ளூர்  : திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் தீபாவளி சீட்டு பண்டு நடத்திவந்தார். மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு  பணத்தை வசூலித்தார்.தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்துள்ளார்.
இதுபற்றி பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது சில நாட்களில் பொருட்கள் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம் கட்டிய பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி கடை முன் திருநின்றவூர் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஆனால் ஜே பி ஜோதியை கைது செய்து பொதுமக்களுக்கு பணத்தை பெற்று தராததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தீபாவளி நெருங்கிய நிலையில் தங்களுக்கு பணத்தையும் பொருட்களையும் பெற்றுத் தர வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *