அருள்மிகு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா திருவீதி உலா புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள அருள்மிகு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா திருவீதி உலா புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்க்கு மலர்களால் அழங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள்,தீப ஆராதனைகள் செய்து திருவீதி உலா புறப்பட்டது.வழிநெடுங்கிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அர்சனைகள் செய்து வழிபட்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
இதில் ஆலய நண்பர்கள் குழு மற்றும் கிரேஸ்கார்டன் நண்பர்கள் குழு இணைந்து இவ்விழாவை சிறப்பாக செய்தனர்.இந்நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.