இருசக்கர வாகன விபத்தில் 8-மாத கர்பிணியான பெண் காவலர் பலி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி உஷா(38) தற்போது 8-மாத கர்பிணியாக இருக்கும் உஷா வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முந்தினம் பணிமுடித்து காவல் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய அவர், அம்மாண்டிவிளை சாலையில் இருந்து  கட்டைக்காடு செல்லும் சாலைக்கு தனது இருசக்கர வாகனத்தை திருப்பும் மோது எதிரே முட்டம் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அதிவேகத்தில் வந்து மோதியது இதில் உஷா இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி உஷா உயிரிழந்தார்
விபத்து குறித்து  மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்
விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய அபிஷேக் ஐ தேடிவருகின்றனர்..

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *