திருவள்ளூர் மாவட்டத்தில் விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விறுவிப்பு :

Loading

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்  இரா.தாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் பெறலாம் எனவும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் அகரத்தை உச்சரித்து பச்சரிசியில் எழுதி குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி வைத்தனர்.  இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாலா, ஜெயக்குமாரி, கீதாலட்சுமி, சங்கீதா, தாரணி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *