கள்ள மது விற்பனை.! இருவர் கைது ஈரோடு !
ஈரோடு அக்டோபர் 6
ஈரோடு மாநகரப் பகுதியில் கள்ள மது விற்பனை செய்யப்படுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் வந்ததன் பேரில் நடந்த சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு ,கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள குயிலான் தோப்பில், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றதை ஈரோடு எஸ் .பி., வி . சசிமோகன் ஐ.பி.எஸ்., உத்தரவின் பெயரில் ,மதுவிலக்கு டி.எஸ்.பி மற்றும் உதவி ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன இதுகுறித்து மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.