கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் தேசிய மதிப்பீட்டு அளவு கோள்களை வளர்க்கும் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கு கல்லூரி வளாளத்தில் நடைபெற்றது

Loading

கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் தேசிய மதிப்பீட்டு அளவு கோள்களை வளர்க்கும் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கு கல்லூரி வளாளத்தில் நடைபெற்றது.
கோவை வடகோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் இன்று தேசியதர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் வகையில் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உத்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென்படேல், குத்துவிளக்கேற்றி வைத்து இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார். முன்னதாக சிறப்பு விருந்தினருக்கு என்சிசி மாணவர்கள், வரவேற்பு அளித்தனர்.
இதனை ஏற்று கொண்ட உத்திர பிரதேச மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென்படேல், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தின் துவக்கவுரையாற்றினார். இதனை தொடர்ந்து அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், முன்னிலை வகித்தார்.
இதனையடுத்து கல்லூரியின் வேந்தர் தியாகராஜன் தலைமையுரை ஆற்றினார். உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் வாழ்த்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வியில் நிறுவனத்தின் சிறப்பம்சம் என்பது நிறுவன செயல்திறனின் வெவ்வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் தொகுப்புகள் குறித்து எடுத்துரைக்க பட்டது.
மேலும் தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பு உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் இதனை தரபடுத்தும், அணுகு முறை குறித்த பரிந்துரைகளை இந்த கருத்தரங்கம் வாயிலாக எடுத்துரைக்க பட்டது. சிறந்த நடைமுறைகள் தரபடுத்துதல் மட்டுமே ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டு செயல்படும் நிலையில் நீடித்த முன்னேற்ற முயற்சிகளை அடிப்படையாக கொண்டு வெற்றிக்கு வழிவகுக்கும் புரிதலை வளர்க்க இது போன்ற கருத்தரங்கு உதவுகின்றது.
வெற்றிக்கு வழிவகுக்கும் அடிப்படைகள் பற்றிய புரிதலின் வளர்ச்சி மிகவும் பொருத்தமான முக்கிய செயல் திறன்களை குறிப்பிடுவதன் மூலமாக நிறுவனங்களின், தற்போதய நடைமுறைகளுக்கும் உயர்ந்த நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள இது போன்ற கருத்தரங்குகள் மாணவிகளின் கல்விமுறையை மேம்படுத்த உதவுவதாக கருத்தரங்கின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *