தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகளை மேயர் ஆய்வு

Loading

தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகளை மேயர் ஆய்வு
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:08:46 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மழைகாலத்திற்குள் முடித்து மக்களின் பாதுகாப்பு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநகர பகுதிகளில் நெருக்கடிகள் இல்லாமல் வாகனங்கள் சென்று வருவதற்கு பல்வேறு பகுதிகளில் தேவையற்ற மற்றும் சிறிய பெரிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய போக்குவரத்து சாலைகளையும் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
குறுகலான சாலைகள் பல பகுதிகளில் விரிவான சாலைகளாக மாறியுள்ளது. சாலைகளில் தேவையற்ற மணல் திட்டுகள் சிறிய பெரிய முட்புதர்கள் செடிகள் குப்பைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்காணிப்பில் ஊழியர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அவ்வப்போது மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை எந்த நேரம் என்று பார்க்காமல் ஆய்வுகளை மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகபுரம் சாலையில் தற்போது நடைபெற்று வரும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகளையும் கடற்கரை சாலையில் நடைபெறும் வடிகால் கட்டுமான பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்ககொண்டு தரமான முறையில் புதிய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *