சேலத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

Loading

சேலத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் பணி நிறைவுபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா அண்ணா பூங்கா எதிரில் உள்ள பொறியாளர் மாளிகை கூட்ட அரங்கில் மாநில தலைவர் சி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் இரா.சண்முகராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்கிட கோருதல்,மகப்பேறு விடுப்பு காலத்தினை பணிகாலமாக கருதி பதவி உயர்வு வழங்கிட கோருதல்,விசாரணையில் சேர்க்காத அரசு அலுவலர்களை வழக்கில் சேர்ப்பதை தடுத்திட கோருதல்,கருணை அடிப்படையிலான பணி நியமனம், பதவி உயர்வு பட்டியலை உடனடியாக கோருவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பணி நிறைவுபெற்ற மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து பொதுக்குழு கூடி புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். சங்கத்தின் புதிய மாநில தலைவராக இரா. பிரேமா வும், மாநில பொதுச் செயலாளராக சி. செல்வகுமார் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கே. ஆர். ராஜேந்திரன் சேலம் TNGOU, எம். ராஜா மாநில பொருளாளர், என். தண்டபாணி மாநில TNGOU,அமிர்தகுமார், சக்ரவர்த்தி, கங்காராம்,மோகன்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *