2வது மண்டல அளவிலான பள்ளி தர மாநாடு
பள்ளிக் கல்விக்கான தர உறுதி மற்றும் அங்கீகாரத்திற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று
2வது மண்டல அளவிலான பள்ளி தர மாநாடு,
பள்ளிக் கல்விக்கான தர உறுதி மற்றும் அங்கீகாரத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தற்போதய சூழ்நிலையில் கல்வி நிலை குறித்தும் மாணவர்களின்
கண்டுபிடிப்புகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் கல்வி துறைகளில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது இன்னும் என்னென்ன மாற்றங்களுக்கு காத்திருக்கின்றது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் தமிழக அரசு தற்போது மாணவிகளின் கல்விமுறையை ஊக்கப்படுத்த நான் முதல்வன் எனும் திட்டத்தின் கீழ் மாதம் 1000 வழங்கப்பட்டு வருகின்றது. இது வரவேற்கத்தக்கது என்றும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,
கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய அங்கீகார வாரிய தலைவர் மேத்தா இந்திய தர கவுன்சில் மூத்த ஆலோசகர்
மது அலுவாலியா என பலரும் கலந்து கொண்டனர்.