திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்வர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

Loading

திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்வர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் :

திருவள்ளூர் செப் 23 : திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி இவர் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி நடத்திவருகிறார். இந்நிலையில் ஜே.பி.ஜோதி என்பவர் தீபாவளி பண்டு சீட்டு நடத்திவருகிறார். இதில் மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு மற்றும் வெள்ளி பாத்திரங்கள் வழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு, குறுவாயில் உட்பட பல கிராமங்களில் தீபாவளி பண்டு சீட்டு பிடித்துள்ளார். அந்தந்த கிராமங்களில் ஏஜென்ட்டுகள் நியமித்து ஏஜென்ட்டு மூலமாக ஆயிரக் கணக்கானோரிடம் பணம் வசூல் செய்து பொதுமக்களின் பணத்தில் தாமரைபாக்கம், திருவள்ளூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜே.பி. .ஸ்டார் ஏஜென்சி புதிய கடைகளை திறந்த ஆடம்பர செலவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கிவி்ட்டதால் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் ஜே.பி. .ஸ்டார் ஏஜென்சி கடைகளை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி கடைமுன்பு திரண்ட மக்களால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தீபாவளி சீட்டு பண்டு கட்டி பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, ஜே.பி. ஜோதி மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான ஜே.பி.ஜோதியை போலீசார் தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *