கி.வீரமணியை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது: பெரியார் திடலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு  

Loading

கி.வீரமணியை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது:

பெரியார் திடலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

 சென்னை, செப்- 18

90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி, அப்படி தொண்டாற்றுகிற கி,வீரமணியை  பார்த்தால் எங்களுக்கெல்லாம் பொறாமையாகக் கூட இருக்கிறது என்று பெரியார் உலகம் உலகம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்  பேசினார்,

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் நடைபெற்ற காணொலி மூலம் “பெரியார் உலகத்திற்கு ” அடிக்கல் நாட்டி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

 செப்டம்பர் 17-ஆம் நாள்  பெரியாரின் பிறந்தநாள் என்பதற்காக, அந்த நாளில் மட்டும் இந்தத் திடலுக்கு நாங்கள் வந்தவர்கள்  அல்ல, என்றைக்கும் வந்திருக்கிறோம், என்றைக்கும் வந்துகொண்டிருப்போம். ஆக, இப்படி அடிக்கடி வரக்கூடியவர்கள் நாங்கள். அடிக்கடி வருவதால்  எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது. நாங்களும் இந்த வீட்டிற்கு உரியவர்கள், இந்த வீட்டைச் சார்ந்தவர்கள், அந்த முறையில்தான் வந்திருக்கிறோம்.

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல, இந்தத் தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் – இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை! இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை!

பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பெரியார் ,  உலகத்தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல – உலகம் முழுமைக்குமான தலைவராக தந்தை பெரியார்  இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பெரியார் உலகம்” என்று  ஆசிரியர் கிவீரமணி  இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக பெரியாருக்கு இணையான புகழைகி.வீரமணி  நிச்சயமாக பெறுகிறார், அதில் எந்த சந்தேகமும் கிடையாது.  பத்து வயதில் பெரியாரின் தொண்டராக இணைந்து, இந்த 90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி, அப்படி தொண்டாற்றுகிற ஆசிரியரி் கி,வீரணியை  பார்த்தால் எங்களுக்கெல்லாம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இத்தகைய சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால், அண்ணா ஒருமுறை சொன்னார்கள், 10 வயதிலேயே பகுத்தறிவின் பால் அருந்தியவர் நம்முடைய ஆசிரியர் , அதனால்தான் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று அண்ணா அப்போதே சொல்லியிருக்கிறார். அதனால்தான் 90 வயதைத் தொடும்போது கூட அவர் உற்சாகமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

‘வீரமணி என்றால் வெற்றி மணி’ என்று  கலைஞர் ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். ‘நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான்’. இதை நான் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக வீரமணி இருந்து நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்  ஆசிரியர் வீரமணி  அத்தகைய திசைவழியே திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் தி மு க ஆட்சி நிச்சயமாக செய்யும். இதுவே தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி! அந்த உறுதிமொழியுடன் கடமை ஆற்றுவோம்!இவ்வாறு அவர் பேசினார்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *