ரகுல்பிரீத் சிங் நடிக்க விரும்பும் கதைகள்

Loading

தமிழ், தெலுங்கு, இந்தியில் இதுவரை 40 படங்களில் நடித்து விட்ட ரகுல்பிரீத் சிங் அடுத்து நடிக்க விரும்பும் கதைகள் கதாபாத்திரங்கள் குறித்த ஆசைகளை பகிர்ந்துள்ளார். ரகுல் பிரீத்சிங் அளித்துள்ள பேட்டியில், ”நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இப்போது வரை முழு அளவிலான காதல் கதையை பின்னணியாக வைத்து எடுத்த படத்தில் நடிக்கவில்லை. எனக்கு காதல் கதைகள் பிடிக்கும். இந்தியில் வந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஜாப் உய் மெட், ஏ ஜவானி ஹய் திவானி மாதிரியான காதல் கதைகளில் நடிக்க ஆசை உள்ளது.
அதேபோல வாழ்க்கை கதைகளில் நடிக்கவும் விரும்புகிறேன்.
இதுவரை மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்த முக்கியமானவர்களின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு வாய்ப்பு வந்தால் யாருடைய வாழ்க்கை கதையானாலும் நடிப்பேன். சரித்திர படங்களில் நடிக்கவும் ஆசையாக உள்ளது. ஒரு முழுமையான காதல் கதை, ஒரு வாழ்க்கை படம், ஒரு சரித்திர படம் இந்த மூன்று வகையிலான படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்” என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *