ஜெயந்திநகர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை அடிக்கடி வருவதால் பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கை

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு  உட்பட்ட ,
ஜெயந்திநகர்,
 மற்றும்   பொது மக்கள் வசிக்கும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை அடிக்கடி வருவதால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் அச்சத்துடன் காணப்படும் நிலை.
இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமையால் வேலைக்கு செல்லும் பொது மக்கள்,
பள்ளி செல்லும் குழந்தைகள்,
 குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்  என அனைத்து தரப்பினரும்  காட்டெருமை  தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ள நிலை.
இந்த பகுதியில் ஒரு சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று காட்டெருமைகள், அதே போல் ஒரு சில நேரங்களில் ஒற்றை காட்டெருமை வரும் நிலை.
இந்த பகுதியில் வசிக்கும்
பொது மக்கள் பாதிக்கபடாமல் இருக்க,
இந்த பகுதியில் காட்டெருமை வருவது  குறையும் வரை ,  வனத்துறை ஊழியர் ஒருவரை இந்த பகுதியில்  பணியமர்த்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க, நீலகிரி மாவட்ட வனத்துறையும், குன்னூர் சரக வனத்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கை
0Shares

Leave a Reply