சேலம் கடவுளிடமிருந்து அரசு பள்ளியை காப்பாற்றி தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
30 கிராமங்களை சேர்ந்த 1100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் ….
சேலம் வீராணம் பகுதியில் 1956 ஆம் ஆண்டு முதல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு தற்பொழுது அரசு மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் அங்குள்ள 30 கிராமங்களை சேர்ந்த 1100 மாணவ மாணவிகள் பயந்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த பள்ளி செயல்படும் இடம் 1984 UDR ல் தவறுதலாக இந்து சமய அறநிலைத்துறைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த இடத்தை தற்போது அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்
இதனால் அதிகாரிகள் இங்கு அரசு பள்ளியை செயல்பட விடாமல் இந்த இடத்தில் கோயில் கட்டுவதாகவும் கோவிலுக்கு வருவாய் ஈட்டும் பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மீண்டும் அதே இடத்தில் அரசு பள்ளி இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.