எந்திரத்தில் சிக்கி தொழிலாளி சாவு

Loading

சேலம் பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி தொட்டிய தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள கிரசர் ஆலை ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் ஒரு மணி அளவில் பழனிசாமி, ஜல்லி எந்திரம் ஓடிக்கொண்டிருந்த போது அதனுடைய பெல்ட்டில் வரும் ஜல்லியை சுத்தம் செய்ய முயன்றார். அப்போது பழனிசாமியின் கை, எந்திரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *