சந்தூரில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாங்கனி வேல்முருகனுக்கு 3 தங்க கிரீடங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் மாங்கனிமலை வேல்முருகன் மலையில் எழுந்து அருளியுள்ள முருகன் வள்ளி-தெய்வானை அவர்களுக்கு சந்தூர் ஜெகன்நாத் அவர்களின் குமாரர் இ.காஸ்மாஸ் பவுண்டேஷன் சேர்மேன் சஞ்சய்குமார் நவநீதா தீக்சித் குடும்பத்தினர் சார்பாக சஞ்சய்குமாரின் தாயார் சாந்தி தீக்சித் நன்கொடையாக மூன்று தங்க கிரீடங்களை, சந்தூர் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் சிறப்பு பூஜைகள் செய்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முன்னதாக பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழக்க கிரீடங்களை வினாயகர் கோயிலுக்கு எடுத்து சென்றனர். அப்போது ஊர் முக்கிய பிரமுகர்கள் சஞ்சய்குமார் குடும்பத்தாருக்கு மாலை அணிவித்து பொண்ணாடை போர்த்தி பரிவட்டம் கட்டி கௌரவபடுத்தினர்.
அப்பொழுது ஒவ்வொரு வருடமும் மூன்று தங்க கிரீடங்களை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு முருகர் சன்னதியில் அலங்கரித்து சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்துமாறும் மேலும் சந்தூரில் உள்ள அனைத்து தெய்வ திருவிழாக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சஞ்சய்குமார் கூறினார்.
இதில் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, ஊர் கவுண்டர் எஸ். எம் சுப்பிரமணி, தி.மு.க ஒன்றிய வர்த்தக அணி காமராஜ், தொழிலதிபர்கள் கே.வி.எஸ் சீனிவாசன், சண்முகம், எஸ்.கே.பி தேவன், ராஜ்குமார், செந்தில், பி.எம்.சி கல்லூரி சேர்மன் குமார், முன்னாள் தலைவர் குமார், மாவட்ட வர்த்தக அணி பி.வி.எஸ் மணிகண்டன், தொண்டரணி அமைப்பாளர் தெய்வம், பெங்களூர் சிவானந் பி.ஜே.பி பர்கூர் ஒன்றிய தலைவர் ரமேஷ் மற்றும் மாது, லட்சுமணன், தினகரன், மாதேஷ், பெருமாள், பூபாலன், சதாசிவம், விஜயகுமார், கோகுல் ஆசிரியர் அருண்குமார், சுப்பிரமணி, குமரேசன், வெங்கடேசன், கேசவன், ராஜா, செந்தில், மகேந்திரன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.