ஆன்லைன் மூலம் Google -ல் Search செய்து முன்பின் தெரியாதவரிடம் பணம் மோசடி

Loading

கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் NCRP -22908210182164 யின் புகார்தாரர் ராஜா வயது 35 த / பெபாலகிருஷ்ணன் RCC காம்ப்ளக்ஸ் என்பவர் B. முட்லூரில் தில்லை டைல்ஸ் & சானிட்டரி கடை வைத்து நடத்தி வருவதாகவும் மேற்கண்ட கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால் தானும் தனது மேனேஜர் மீனாபாண்டியும் ஆன்லைன் மூலம் Google -ல் Search செய்து முன்பின் தெரியாத கர்நாடகா மாநிலம் பெங்களுார் பணசங்கரி , 7 வது மெயின்ரோட்டில் வசிக்கும் சுதர்சனராஜு த / பெ வெங்கமராஜு என்பவரிடம் டைல்ஸ் ஆர்டர் செய்து ரூபாய் . 5,00000 டெபாசிட் செய்ததாகவும் பணத்தை பெற்றுக்கொண்ட மேற்படி நபர் பணத்தை மோசடி செய்துவிட்டதாக கொடுத்திருந்த புகார் சம்பந்தமாக கடலூர் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 07/2021 U / S 419 , 420 , 465 , 461 IPC r / w 66D IT Act யின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது .

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர்கள் திரு . உதயகுமார் , திரு . தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் , திரு . அய்யப்ராஜு , தலைமை காவலர்கள் திரு . மௌலீஸ்வரன் . திரு . ஸ்டாலின் , திரு . பாலமுருகன் , முதல்நிலை காவலர் திரு . பாக்கியராஜ் , காவல் வாகன ஓட்டுநர் திரு . பிரபு ஆகியோர் வெளிமாநில கடவுச்சீட்டு பெற்று போலீஸ் வாகனம் மூலம் பெங்களுர் சென்று இவ்வழக்கின் எதிரி சுதர்சனராஜு வயது 44 த / பெ வெங்கமராஜு பணசங்கரி , 7 வது மெயின்ரோடு கர்நாடகா என்பவரை கைது செய்து கடலூர் சைபர் கிரைம் காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டு எதிரி பயன்படுத்திய 3 செல்போன்கள் , 3 சிம்கார்டுகள் , ATM கார்டு , ஆதார் கார்டு , போலி கம்பணி ஆவணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *