வேலூர் அடுத்த அரியூர் சீரடி ஸ்ரீ அக்ஷயபாபா ஆலயத்தில் 10 -ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா.
வேலூர் ஜூலை 14
வேலூர் மாவட்டம் அடுத்த அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி ஸ்ரீஅக்ஷய பாபாவிற்கு 10 -ம் ஆண்டு குரு பூர்ணிமாபெருவிழா நேற்று வெகு விமர்சியான முறையில் நடைபெற்றது இந்த விழாவை முன்னிட்டு காலையில் காக்கட ஆரத்தி, அபிஷேகம், நைவேத்தியம் ஆரத்தி, பிற்பகல் அபிஷேகம், பகல் மத்ய ஆரத்தி, மாலை அபிஷேகம். தூப ஆரத்தி மாலை ஆரத்தி, இரவு புஷ்ப பல்லக்தில் ஊர்வலம், பின்பு அபிஷேக ஆரத்தி நடந்தது. மதியம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்குஅன்னதானமும் நடந்தது. பாபா பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
ஏற்பாட்டை ஷீரடி சாய் மஹராஜ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.