மதுரை பள்ளிவாசலில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல்

Loading

மதுரை நகர் மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் ஜாபர் ஷரீப் அவர்கள் பார்க் டவுனில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற போது இஸ்லாமியர்கள் 50 பேர் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இச்சம்பவத்தில் மயக்கம் அடைந்த நிலையில் மதுரை நகர் வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் பா. சரவணன் EX-MLA அவர்கள் வடமலையான் மருத்துவமனைக்கு உடனடியாக நேரில் சென்று சம்பவத்தை விசாரித்தார் மேலும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை Ex-IPS தொலைபேசி மூலம் உடனடியாக தொடர்பு கொண்டு விசாரித்தார். இந்த செயலை மதுரை மாநகர் பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறது என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பா. சரவணன் Ex- MLA செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *