சென்னை ராயபுரம் வார்டு49 இராஜ ரத்தினம் 5வது சந்தில் சென்னை மாநகராட்சி மருத்துவமனை அருகே மரம் ஒன்று அபாய நிலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது
சென்னை ராயபுரம் வார்டு49 இராஜ ரத்தினம் 5வது சந்தில் சென்னை மாநகராட்சி மருத்துவமனை அருகே மரம் ஒன்று அபாய நிலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளி குழந்தைகள்,பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அதிகம் கடந்து செல்லும் பாதை என்பதால் மரம் பிடிமானம் இல்லாமல் எந்நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன்பாக அந்த மரத்தை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து ஏதேனும் நடப்பதற்க்குள் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகராட்சி பூங்கா பராமறிப்பு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாய்ந்து விழும் நிலையில் உள்ள அந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.