ஆத்தூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

Loading

சேலம் மாவட்டம்,
ஆத்தூரில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலம் நேற்று ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பூங்காவில் காலை 10 மணியளவில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் நகரமன்ற தலைவர் திருமதி. நிர்மலா பபிதா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும்  நகராட்சி ஆணையாளர்(பொ) வெங்கடாச்சலம் அவர்களின் முன்னிலையில் தூய்மை குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும் வீடுவீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பது பற்றியும் குப்பைகளை பொது இடத்தில் வீசக்கூடாது என்றும், பிளாஸ்டிக்கை முடிந்த அளவு பயன்படுத்த கூடாது என்றும், பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம், செய்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், நுண் உரம் செயலாக்க மையம், பையோமைனிங் பணிகளை நகரமன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், தூய்மை பனி அலுவலர், தூய்மை பனி ஆய்வாளர், நகராட்சி அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *