ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி தலைமையில் வரவேற்பு.
ஒட்டன்சத்திரம் ஜூன்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கமாக செல்லும், மதுரையிலிருந்து
திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்;பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில்
நின்று சென்றது. இதனை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி கொடி அசைத்து
வரவேற்று பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதி பொதுமக்களின் நீண்ட நாள்
கோரிக்கையான அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லவேண்டும்
என்ற கோரிக்கையை ஏற்று, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்
அர.சக்கரபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான நான் இருவரும் டெல்லியில்
ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து கடிதம் வாயிலாகவும், நேரிலும் பல முறை
வலியுறுத்தியதன் பேரில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அனுமதி அளித்ததினால்
ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா எஸ்கிரஸ் ரயில் நின்று செல்கிறது.
தற்பொழுது மூன்று மாத காலத்திற்கு சோதனை ஓட்டமாக நின்று செல்லும் இந்த
அமிர்தா எக்ஸ்பிரஸ் இரயில் சேவையினை ஒட்டன்சத்திரம் தொகுதி பொதுமக்களும்,
விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்படுத்தி ரயில் சேவையை தொடர்ந்து நின்று செல்ல
ஆதரவளிக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் திமுக ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, மாவட்ட
துணைச்செயலாளர் சி.ராஜாமணி, மாவட்ட அவைத்தலைவர் தி.மோகன், ஒன்றிய செயலாளர்கள்
தங்கராஜ், தி.தர்மராஜன் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், ஒன்றிய
பெருந்தலைவர் ஐயம்மாள், துணைப்பெருந்தலைவர் காயத்திரி தேவி, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற
தலைவர் க.திருமலைசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம், மாவட்ட
இளைஞரணி துணைஅமைப்பாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான க.பாண்டியராஜன்,
தென்னக ரயில்வே மதுரை கோட்ட வர்த்தக மேலாளர் வெங்கடரமணன், திண்டுக்கல் கூடுதல் கோட்ட
பொறியாளர் நாராயணன், ஒட்டன்சத்திரம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஆர்.முத்துச்சாமி, ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பொன்னுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் தலைவர் எஸ்.எஸ்.சுரேஸ்குமார்,
செயலாளர் டி.ஹெரால்டு ஜாக்சன், பொருளாளர் எஸ்.கோபி உள்ளிட்ட உள்ளாட்சி
பிரதிநிதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வழிவகை செய்த
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமிக்கு தமிழகம், கேரளா நண்பர்கள் குழு
சார்பில் சால்வை அணிவித்து நன்றியும், பாராட்டுக்களை தெரிவித்தனர்.