V. நந்தகுமார் IRS தலைமையில் பேராசிரியர் . ரங்கநாதன் அவர்களது முன்னிலையில் டாக்டர். சாந்தி சரவணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி
V. நந்தகுமார் IRS தலைமையில் பேராசிரியர் . ரங்கநாதன் அவர்களது முன்னிலையில் டாக்டர். சாந்தி சரவணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி, SANTSAR Art Series பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள் மற்றும் சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவுரைகளும், அதைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் வலியுறுத்தப்பட்டன. கண்காட்சிக்குத் தலைமை தாங்கிய விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஓவியங்கள், ஓவியங்களின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அதன் நுட்பங்களைப் பற்றிய பிரசுரம் மற்றும் அன்பளிப்பு வழங்கப்பட்டது இந் நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்…